தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சாலை ஓரத்தில் இறந்து கிடந்தார்.

இவரது புனித உடலை காவல்துறையினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து விசாரித்ததில் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
மதிகோன்பாளையம் காவல் நிலைய காவலர் ஜெயச்சந்திரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கணேஷ், மருத்துவர் ஜெயபிரகாஷ், தலைமையாசிரியர் சாந்தி, சென்னை கைங்கர்யா அறக்கட்டளை ஒத்துழைப்புடன் இறுதி அஞ்சலி செலுத்தி பச்சையம்மன் கோவில் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 234 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.



