மற்ற செய்திகள்

திருவண்ணாமலை தீபமலை மீது தடையை மீறி சென்று புகைப்படங்களை வெளியிட்ட சின்னத்திரை நடிகை!

சனவரி 29|தை 15



திருவண்ணாமலை


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலை மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தீபத் திருவிழாவின் போதும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தீபம் நிறைவடைந்த பின்னர் அனுமதியின்றி மலைமீது சென்ற பெரம்பலூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். மேலும், மலைமீது தடையை மீறி செல்பவர்களை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, அண்ணாமலையார் தீபமலை மீது தடையை மீறி ஏறிச்சென்று அங்கு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அதில், பொதுமக்களை மலை ஏறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவும் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருவதால் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மலை மீது சின்னத்திரை நடிகை அர்ச்சனா மட்டும் தனியாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், அவருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks