மற்ற செய்திகள்

கேரளா வாலிபர் தீபக் என்ற இளைஞரை மரணத்துக்குத் தள்ளிய எடிட் செய்யப்பட்ட போலி வீடியோவால் சர்ச்சை

 சனவரி 24 | தை 10

கேரளா

வீடியோ எடிட் செய்யப்பட்டதென்று தீபக் என்ற இளைஞரை மரணத்துக்குத் தள்ளிய போலி விடியோ பிரச்சாரத்தில், கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீசால் கைது செய்யப்பட்ட வடகரா ஷிம்ஜிதா முஸ்தஃபாவை 14 நாட்கள் ரிமாண்ட் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற முயன்ற வேளையில், கேரளா போலீசின் மின்னல் நடவடிக்கையால் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டார்.

தற்போதைய நிலவரப்படி, அவருக்கு எங்கும் ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பதே வெளிவரும் தகவல் தீபக்குக்கு எதிராக ஷிம்ஜிதா சமூக ஊடகங்களில் பரப்பிய வீடியோ எடிட் செய்யப்பட்டதென்று போலீஸ் கண்டறிந்துள்ளது. பஸ்ஸுக்குள் இருந்து ஷிம்ஜிதா எடுத்த மூன்று வீடியோ காட்சிகளை ஒன்றாக இணைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்களின் அசல் காட்சிகளில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், அவருக்கான சட்டச் சிக்கல் மேலும் கடுமையாகும்.



தீபக்கும் ஷிம்ஜிதாவும் பயணித்த பஸ்ஸின் CCTV காட்சிகளை போலீஸ் ஆய்வு செய்தபோது, எந்தவித அசாதாரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீபக் அநாகரிகமாக நடந்துகொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பஸ்ஸில் இருந்த மற்ற எந்த பயணிகளும் இத்தகைய சம்பவம் நடந்ததாக கூறவில்லை. ஷிம்ஜிதாவின் மொபைல் போனில் உள்ள அசல் வீடியோவில் கூறப்படும் குற்றச்சாட்டு தென்படவில்லை என்றால், அது அவருக்கு பெரும் பின்னடைவு என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அத்தகைய ஒரு காட்சி இருந்திருந்தால், விவகாரம் வெடித்தபோதே அதை அவர்கள் பகிர்ந்திருப்பார்கள்; அதனால் அப்படி ஒரு கிளிப் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.



வழக்கு பதிவு செய்யப்பட்டதும் போனை ஆஃப் செய்து தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை, வாடகராவில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து போலீஸ் கைது செய்தது. இவர் லீக் கட்சியின் பெண் நிர்வாகியும், அரீக்கோடு பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். தற்கொலைக்கு தூண்டுதல் குற்றம் உட்பட BNS 108 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய கடுமையான சட்டப்பிரிவு ஆகும்.



முன்ஜாமீன் கோரி கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வர இருந்தபோதே, போலீஸ் அதிவேகமாக கைது செய்தது. குண்டமங்கலம் முதல் வகுப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷிம்ஜிதாவை 14 நாட்கள் ரிமாண்ட் செய்து மஞ்சேரி சிறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. தீபக்கின் தாய் கே. கன்யகா சிட்டி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks