குற்றங்கள்

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற மகனின் சடலத்தை வாங்க மறுத்த தாய்!

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாஸ் மண்டலின் உடலை ஏற்க அவரது தாய் சந்தியா மறுத்துள்ளார். போலீஸ் மோதலில் உயிரிழந்த தனது மகனின் உடலை வீட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் உயிரிழந்த பிறகு, அவரது உடலைப் பெற குடும்பத்தினரோ உறவினரோ யாரும் முன்வரவில்லை. இதையடுத்து தகவலறிந்து அவரது வீட்டிற்கு வந்த விசாரணை அதிகாரிகளிடமே சந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தார்.

“11 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த என் மகன் பிரபாஸ் மண்டலின் உடலை இந்த வீட்டிற்குள் கொண்டு வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

மேலும், “அவனுடைய முகத்தைக்கூட நான் பார்க்க விரும்பவில்லை. அவன் செய்த கொடூரமான குற்றத்திற்கான தண்டனையே அவனுக்குக் கிடைத்துள்ளது. அதற்கு அவன் தகுதியானவன். இனி ஒருபோதும் அவன் முகத்தைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

கொல்கத்தா அருகே உள்ள பருயிபூர் பகுதியில் 11 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, போலீசாருடன் நடந்த மோதலில் பிரபாஸ் மண்டல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தனது மகன் செய்த குற்றத்தின் தீவிரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவரது உடலைக்கூட ஏற்க மறுத்த தாயின் இந்த வெளிப்படையான நிலைப்பாடு சமூகத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks